தமிழ்நாடு

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு

DIN

விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு  தேமுதிக தலைவர் விஜயகாந்த் முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி, நான்குனேரிக்கு அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும், நாங்குனேரியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை  அவரது இல்லத்தில் அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், பி.தங்கமணி ஆகியோர் சந்தித்து ஆதரவு கேட்டிருந்தனர்.
இந்த நிலையில் விஜயகாந்த் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: தமிழகத்தில் நடைபெற உள்ள இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவைத் தெரிவிக்கிறது. 
நான்குனேரி, விக்கிரவாண்டி இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்குப் பணியாற்றி, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அயராது பாடுபட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் தேமுதிகவுக்கு குறிப்பிடத்தக்க அளவில் செல்வாக்கு உள்ளது.  இப்போது தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளதன் மூலம் அதிமுகவின் பலம் அதிகரித்துள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளான பாமகவும், தமாகாவும் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT