தமிழ்நாடு

சென்னையில் 156 பேருக்கு கரோனா: ராயபுரத்தில் மட்டும் 43 பேர்

DIN

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை காலை 10 மணி நிலவரப்படி 156 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி கரோனா பாதிப்பு 149 ஆக இருந்தது.

திருவொற்றியூர் முதல் சோளிங்கநல்லூர் வரை 15 மண்டலங்களைக் கொண்ட சென்னையில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 43 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் திருவிக நகரில் 22 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 19 பேருக்கும் கரோனா பாதித்துள்ளது. அண்ணாநகரில் 15 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 13 பேருக்கும், தேனாம்பேட்டையில் 11 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெருங்குடியில் ஐந்து பேருக்கும், திருவொற்றியூர், வளசரவாக்கம், அடையாறு, பகுதிகளில் தலா நான்கு பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மணலி, அம்பத்தூர் பகுதிகளில் கரோனா நோயாளிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT