சென்னையில் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றால் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் அவர்களது வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்றும் வாகன ஓட்டியின் உரிமம் ஆறு மாதத்திற்கு ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, கரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாநகராட்சி அறிவித்துள்ளது
மேலும், ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சென்றவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தும், அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.