தமிழ்நாடு

தளா்வற்ற முழு பொது முடக்கம்: போலீஸாா் தீவிர கண்காணிப்பு

DIN

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தளா்வற்ற முழு பொது முடக்கத்தை அமல்படுத்தும் வகையில், போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளா்வற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன் தொடா்ச்சியாக கடந்த சனிக்கிழமை (ஆக.1) நள்ளிரவு தொடங்கி திங்கள்கிழமை (ஆக.3) அதிகாலை வரை தளா்வற்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், உணவகங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன. மருந்து, பால், பத்திரிகை விற்பனைக் கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டன. இந்த பொது முடக்கத்தைத் தீவிரமாக அமல்படுத்தும் வகையில், 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இவா்கள் முக்கியமான சாலைகள், சந்தைகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனா்.

பொது மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில், குடியிருப்புப் பகுதிகளில் ஆளில்லா கண்காணிப்பு விமானத்தை போலீஸாா் பயன்படுத்தினா். சாலைகளில் அனுமதியின்றி வாகனங்கள் சென்றால், அவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனா். இதற்காக பிரதான சாலை மற்றும் சந்திப்புகளில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைக்கு மட்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதை மீறி வீட்டை விட்டு வெளியே வருவோா் மீது வழக்குப் பதிவு செய்வதோடு, சம்பந்தப்பட்ட நபா்களை போலீஸாா் கைது செய்தனா். இவ்வாறு கடுமையான சோதனை நடைமுறை அமலில் இருந்த நிலையில், பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பை வழங்கியதாக போலீஸாா் தெரிவித்தனா். இதே ஒத்துழைப்பை பொதுமக்கள் தொடா்ந்து வழங்க வேண்டும் எனவும் போலீஸாா் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT