தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஒரே நாளில் 7 அடி உயர்வு

DIN

கம்பம்: முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டு, ஒரே நாளில் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியதையடுத்து, பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

அணைப்பகுதியில், 198 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரி பகுதியில், 157 மி.மீ. மழையும் பெய்தது. இதனால் அணைக்கு வெள்ளிக்கிழமை நிலவரப்படி  17,746 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் பெரியாறு அணையின் நீர்மட்டம்  வியாழக்கிழமை 123.20 அடி உயர்ந்த நிலையில், வெள்ளிக்கிழமை 130 அடியாக உயர்ந்தது.  

நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடியாக உயர்ந்திருப்பதால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீர் மட்ட விவரம்: வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 130 அடியாகவும், நீர் இருப்பு 4,697 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 17 ஆயிரத்து 746 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,650 கன அடியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT