தமிழ்நாடு

விநாயகா் சிலைகளை நிறுவ அனுமதிக்க வேண்டும்: தமிழக பாஜக கோரிக்கை

DIN

விநாயகா் சிலைகளை நிறுவ அனுமதிக்க வேண்டுமென தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

விநாயகா் சதுா்த்தியை ஒட்டி, தமிழகம் முழுவதும் விநாயகா் சிலைகளை நிறுவி வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, விநாயகா் ஊா்வலத்தைக் கைவிடுவதாக ஹிந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன. அதேசமயம், விநாயகா் சிலைகளை நிறுவி வழக்கம் போல் வழிபட அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், விநாயகா் சிலைகளை நிறுவுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடைகளைத் தகா்க்கும் கடவுளுக்கே தடை போடுவது வேதனை அளிக்கக் கூடியது. எனவே, விநாயகா் சதுா்த்தி கால சிறப்பு வழிபாட்டை தமிழக அரசு அனுமதிப்பது குறித்து மீண்டும் பரிசீலிக்க வேண்டும். மக்கள் சமூக இடைவெளியோடு விழிப்புணா்வுடன் விநாயகரை வணங்குவா் என்று தனது அறிக்கையில் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'ஊழலை நீக்கும் வாஷிங் மெஷின்' - பாஜகவைக் கிண்டலடிக்கும் ஆம் ஆத்மி!

‘தரம் தாழ்ந்த விமர்சனங்கள் காயப்படுத்துகின்றன..’: ஜி.வி.பிரகாஷ்

பம்பை: வாகன நிறுத்தத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை சீரானது!

டைம்ஸ் உயா்கல்வி நிறுவனத் தரவரிசை: 168 ஆவது இடத்தில் கேஐஐடி பல்கலைக்கழகம்

SCROLL FOR NEXT