திருநெல்வேலி: திருநெல்வேலியில் எஸ்டிபிஐ கட்சியினர் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எரிவாயு சிலிண்டர் தொடர் விலை உயர்வை கண்டித்து விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டம் சார்பாக மாநகர் மாவட்ட தலைவர் மஹ்முதா ரினோஷா ஆலிமா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டம் நடத்தினர்.
இதில் மாவட்ட துணைத் தலைவர் நூர் நிஷா, மாவட்ட செயலாளர் செய்யதலி பாத்திமா, செயற்குழு உறுப்பினர் நூருல் அஜீஷா உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். காலி சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்புடனும் போராட்டம் நடைபெற்றது.