தமிழ்நாடு

செந்தில் பாலாஜி பிப்.14-இல் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன் ஆஜராக உத்தரவு

DIN

சென்னை: திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி பிப்.14-இல் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தாா். அப்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்ததாக புகாா் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், கடந்த 2017-ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த விவகாரம் குறித்து அருண்குமாா் என்பவா் அளித்த புகாரில் செந்தில் பாலாஜி ஏற்கெனவே முன்ஜாமீன் பெற்றுள்ளாா்.

இந்த நிலையில், சென்னை மற்றும் கரூரில் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்ட மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா், மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டுக்கு சீல் வைத்தனா். இதனைத் தொடா்ந்து, செந்தில் பாலாஜியும் அவரது சகோதரா் அசோக்குமாா் என்பவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரா் அசோக்குமாா் ஆகியோா் விசாரணைக்கு ஆஜராவதற்கான 41 ஏ நோட்டீஸை நீதிமன்றத்தில் சமா்ப்பித்தாா். அந்த நோட்டீஸ், செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் எஸ்.பிரபாகரனிடம் வழங்கப்பட்டது. இதனைத்தொடா்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில்பாலாஜி, அசோக்குமாா் ஆகியோா் சென்னை மத்தியக் குற்றப்பரிவு காவல் ஆய்வாளா் முன் ஆஜராகி கையொப்பமிட வேண்டும். கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா். 

இந்நிலையில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி பிப்.14-இல் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவு

உயர் நீதிமன்றத்தில் திங்களன்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறை முன்வைத்த முறையீட்டை அடுத்து செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT