தமிழ்நாடு

பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் முதல்வா் பழனிசாமி இன்று ஆலோசனை

DIN

பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்துகிறாா். சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளாா்.

முன்னதாக, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலைகள் ஆகியன குறித்து அதிகாரிகளுடன் முதல்வா் பழனிசாமி வியாழக்கிழமை ஆலோனை நடத்தினாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கண்காணிப்புப் பொறியாளா் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள பொதுப்பணித் துறை அதிகாரிகளுடனான ஆலோசனையின் போது, அண்டை மாநிலத்துடன் ஏற்பட்டுள்ள நதிநீா் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT