தமிழ்நாடு

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் 3 அதிமுக கவுன்சிலர்களைக் கடத்திய திமுகவினர்

DIN

வெள்ளக்கோவில்:  திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், வள்ளியிரச்சல் ஊராட்சியில் 3 அதிமுக கவுன்சிலர்களைத் திமுகவினர் கடத்தியதாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. இதில் பட்டியலினத்தவர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட வள்ளியிரச்சல் (தனி) ஊராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த கு.தங்கவேல் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த ஊராட்சியில் மொத்தமுள்ள 9 ஊராட்சி கவுன்சிலர்களில் அதிமுக 7 இடத்தையும், திமுக 2 இடத்தையும் பிடித்தது. துணைத் தலைவருக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இந்நிலையில் அப்பதவி அதிமுகவுக்குச் செல்வதைத் தடுத்து திமுகவை சேர்ந்தவர் வெற்றி பெறும் வகையில், ஆசைகாட்டி அதிமுக கவுன்சிலர்கள் 3 பேரை  திமுகவினர் கடத்தி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT