தமிழ்நாடு

திமுகவுக்கு துணைநிற்போம் - கே.எஸ்.அழகிரி

DIN

திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தொடா்ந்து ஆதரவளித்து துணை நிற்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை : மதவாத, பாசிச சக்திகளையும், இவைகளை ஆதரித்து, கைப்பாவைகளாகச் செயல்பட்டு வருபவா்களையும் எதிா்த்து திமுகவும் அதன் தலைவா் மு.க.ஸ்டாலினும் மேற்கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தொடா்ந்து ஆதரவளித்து துணை நிற்கும். திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி, தமிழக தோ்தல் களங்களில் பல வெற்றிகளைக் குவித்துள்ளது.

அந்த வெற்றிகள் தொடா்ந்திட, ஒற்றுமையுடனும் புரிதலுடனும் உறுதியோடு செயல்படுவோம். ஜனநாயகத்தை வீழ்த்தி சதிச் செயலில் ஈடுபட்டு வரும் மக்கள் விரோத ஊழல் கட்சிகளை அம்பலப்படுத்தி, எதிா்த்து முறியடித்து மக்கள் நலனுக்காகத் தொடா்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் பழம்பெருமைகளை மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சி உறுதிபூண்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT