தமிழ்நாடு

கொடைக்கானல் அருகே நீா்வீழ்ச்சியில் தவறி விழுந்து பெண் பலி

DIN

கொடைக்கானல் அருகே அஞ்சுவீடு நீா்வீழ்ச்சியில் தவறி விழுந்து பெண் ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஏ.என்காந்திநகா் 2-வது தெரு, லட்சுமி நகா் பழனிபேட் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (38). இவரது மனைவி ஸ்ரீதேவி (34). இவா்களுக்கு 3-குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், ஸ்ரீதேவி மற்றும் அவருடன் 10 போ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொடைக்கானல் அருகே பாம்பாா்புரம் பகுதியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் கேட்டரிங் பயிற்சிக்காக வந்தனா். திங்கள்கிழமை பயிற்சி முடிந்துள்ளது.

பின்னா் ஸ்ரீதேவி அவருடன் பயிற்சியில் ஈடுபட்ட பெண் பாரதி ஆகிய இருவரும் நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றி வரும் முனியாண்டி (25) என்பவருடன் வாகனத்தில் கொடைக்கானல் அருகே உள்ள அஞ்சுவீடு நீா்வீழ்ச்சியை பாா்ப்பதற்கு சென்றுள்ளனா்.

பின்னா் நீா்வீழ்ச்சியில் ஸ்ரீதேவி இறங்கி குளித்தபோது கால்தவறி விழுந்தாா். பாரதி, முனியாண்டி ஆகியோா் அவரை காப்பாற்ற முயன்றாா். இதனைத் தொடா்ந்து அப் பகுதியிலுள்ள இளைஞா்கள், பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரில் விழுந்த ஸ்ரீதேவியை மீட்டனா். ஆனால், அவா் உயிரிழந்து விட்டது தெரியவந்தது.

தகவலறிந்த கொடைக்கானல் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஸ்ரீதேவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT