முகப்பு
தமிழ்நாடு

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:37 PM
பகிர்:

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா அரசு கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் 515 பேருக்கு 93.47 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். 

Advertisement

மாவட்ட காவலர்கள் 39 பேருக்கும், மாநகர காவல்துறையினர் 16 பேர் என 55 பேருக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்பட்டது. 239 பேருக்கு பணியை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார்,, துணை ஆணையர்கள் வெ.பத்ரி நாராயணன், எஸ்.பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments