சென்னை: ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்த்து, அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்ப்பதாகவும், கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்தியுள்ள தொகையில் வருமானவரி நிலுவையை வசூலிக்கவும் தடை விதிக்கவும்’ கோரிக்கை வைத்துள்ளார்.
அத்துடன் வேதா இல்லத்தின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் ஜெ.தீபா கோரியுள்ளார்.