தமிழ்நாடு

திருச்சி: விபத்தில் காயமடைந்து உயிரிழந்த இளைஞருக்கு கரோனா உறுதி

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞருக்கு கரோனா தொற்று உறுதியானது தெரியவந்துள்ளது.

DIN

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞருக்கு கரோனா தொற்று உறுதியானது தெரியவந்துள்ளது.

திருச்சி மாவட்டம், கல்லக்குடி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் (25). பஞ்சர் ஒட்டும் தொழிலாளியான இவர், சாலை விபத்தில் பலத்த காயமடைந்து கடந்த 8ஆம் தேதி திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துமவனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இவருக்கு, கடந்த 10ஆம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது. 

இதையடுத்து தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் மூளை வரையில் உள்ளுறுப்புகள் சிதைந்து சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்திருந்தாலும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் வழிகாட்டுதலின்படி பிரேதப் பரிசோதனை செய்து, உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாண்டு அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

திருச்சியில் ஏற்கெனவே 70 வயது மூதாட்டி கரோனா தொற்றுடன் சிகிச்சைக்கு வந்து கடந்த 2ஆம் தேதி உயிரிழந்தார். இதேபோல, திருவள்ளூரிலிருந்து பெரம்பலூர் வந்து தொற்று உறுதியான 53 வயது ஆண் திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த 7ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து மூன்றாவது ஒரு உயிரிழப்பு சனிக்கிழமை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT