முகப்பு
தமிழ்நாடு

பொட்டிரெட்டிபட்டி ஏரி புனரமைப்பு பணி தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பருவமழை காலத்தில் தண்ணீரைத் தேக்கி வைக்கும் வகையில் பொட்டிரெட்டிபட்டி ஏரி மற்றும் குட்டைகள் சீரமைப்பு பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 18 ஜூன் 2020, 6:20 pm IST
பொட்டிரெட்டிபட்டி பகுதியில் குட்டைகள் புனரமைக்கும் பணியைத் தொடக்கி வைக்கிறார் நாமக்கல் கோட்டாட்சியர் எம். கோட்டைக்குமார்.
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் பருவமழை காலத்தில் தண்ணீரைத் தேக்கி வைக்கும் வகையில் பொட்டிரெட்டிபட்டி ஏரி மற்றும் குட்டைகள் சீரமைப்பு பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி  ஒன்றியம், பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட  கோம்பை சாலையில்  உள்ள  ஏரி மற்றும் இரட்டை குட்டைகள் புனரமைப்பு பணியை நாமக்கல் கோட்டாட்சியர் எம். கோட்டைக்குமார் தொடக்கி வைத்தார். 

2 பொக்லைன் இயந்திரம் கொண்டு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் துளசிராமன் உபதலைவர் சுரேஷ்,  ஒன்றிய வார்டு உறுப்பினர் துரை மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

பசுமை நாமக்கல் தலைவர்  வ.சத்தியமூர்த்தி குட்டை புனரமைக்கும் பொறுப்பை ஏற்றுக்  கொண்டுள்ளார். இந்த விழாவில் பசுமை நாமக்கல் ஒருங்கிணைப்பாளர் தில்லை சிவகுமார் மற்றும் நாமக்கல் நல்லோர் வட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments