தமிழ்நாடு

திருவள்ளூர் அருகே வெடிகுண்டுடன் 2 பேர் கைது

DIN

திருவள்ளூர் அருகே வாகனச் சோதனையில் நாட்டு வெடிகுண்டு, பட்டாக்கத்தியுடன் வந்த 2 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் தரப்பில் கூறியதாவது..

திருவள்ளூர் அருகே கிராமிய காவல் நிலைய போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனம் நிற்காமல் சென்றதால், பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்து வாகனத்தைச் சோதனையிட்டனர். அப்போது, அவர்களிடம் நாட்டு வெடிகுண்டுகள், பட்டாக்கத்தியும் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. 

மேலும், போலீஸார் விசாரணையில் அவர்கள் ராமலிங்கம்(48) மற்றும் ரஞ்சித்(30) என்பது தெரியவந்தது. அதேபோல், பிரபல ரவுடி பாம் சரவணனை தீர்த்துக் கட்டுவதற்காக சிறையிலிருந்த நாகேந்திரன் என்ற சிறைக்கைதி அளித்த தகவலை அடுத்து கொலை செய்வதற்கு சென்றதும் விசாரணை மூலம் தெரியவந்தது.

மேலும், திருவள்ளூர் கிராமிய காவல் நிலைய போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்து, கொலை மிரட்டலும் விடுத்ததாகவும் கூறி 2 பேரையும் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT