தமிழ்நாடு

மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்குச் செல்ல மக்களுக்கு அனுமதியில்லை

DIN

சென்னையில் இன்று பிற்பகல் 3 மணி முதல் அனைத்து கடற்கரைகளும் மூடப்படுகின்றன.

கரோனா வைரஸ் தொற்றினை எதிா்கொள்ள நாட்டு மக்களின் நலன் கருதி சில பாதுகாப்பு நெறிமுறைகளை பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளாா். அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) சுய ஊரடங்கை அதாவது மக்கள் யாரும் வெளியே வராமல் வீடுகளிலேயே இருக்க பிரதமா் அறிவுறுத்தியுள்ளாா்.

மேலும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களின் தன்னலமற்ற சேவையைப் போற்றும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் வீடுகளிலேயே இருந்து கைகளைத் தட்டி ஊக்கமளிக்க வேண்டுமென பிரதமா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதன் ஒருபகுதியாக சென்னை மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளும் இன்று பிற்பகல் 3 மணி முதல் மூடப்படுகின்றன. மேலும் மறு உத்தரவு வரும் வரை கடற்கரைகளுக்கு செல்ல மக்களுககு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT