தமிழ்நாடு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: 2 பேர் கைது

DIN

சாத்தூர் அருகே சிற்பிப்பாறையில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 

பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர்  கணேசன், மேலாளர் பாலகிருஷ்ணன், மேற்பார்வையாளர்கள்குட்டி, மகேஸ்வரன், ஆலை போர்மேன் மதியழகன் உள்ளிட்ட 6 பேர் மீது  கவனக்குறைவாக வெடிபொருட்களை கையாண்டது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அலட்சியமாக செயல்பட்டு விபத்து ஏற்படுத்தியது. 

மரணம் ஏற்படும் வகையில் குற்றம் புரிந்தது  உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் ஆலையின் போர்மேன் மதியழகன் மற்றும் மேற்பார்வையாளர் மகேஸ்வரன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் ஆலை உரிமையாளர் கணேசன் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம்.. சர்ச்சையில் பாஜக!

சிரிப்பே துணை!

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

SCROLL FOR NEXT