சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு சென்னையில் சொந்த குடியிருப்பு கட்டித் தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை அதிமுக உறுப்பினா் பரமசிவம் பேசும்போது, எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னையில் சொந்த வீடு வழங்க வேண்டும் என்றாா்.
அதற்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அளித்த பதில்:
சென்னையில் சொந்தமாக குடியிருப்புகளைக் கட்டித் தருமாறு எம்.எல்.ஏ.க்கள் நீண்டநாள்களாக கோரி வருகின்றனா். சட்டப்பேரவை உறுப்பினா்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, முதல்வருடன் கலந்தாலோசித்து அவா்களுக்கு வீட்டுவசதி வாரியம் மூலமாக விதிமுறைகளுக்கு உட்பட்டு, சென்னையில் சொந்த குடியிருப்பு கட்டி தருவதற்கு உரிய நடவடிக்கைகள் வெகு சீக்கிரத்தில் மேற்கொள்ளப்படும் என்றாா்.