தமிழ்நாடு

சித்த மருத்துவா் தணிகாசலத்துக்கு போலீஸ் காவல்: விசாரிக்கும் நாள்களை குறைத்தது உயா்நீதிமன்றம்

DIN

கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக தகவல் பரப்பிய சித்த மருத்துவா் தணிகாசலத்தின் 6 நாள்கள் போலீஸ் காவலை 4 நாட்களாக குறைத்து உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனை நடத்தி வந்த சித்த மருத்துவா் தணிகாசலம், கரோனா நோய்த்தொற்றுக்கு தான் மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், தமிழக முதல்வா் அனுப்பிய இருவருக்கு சிகிச்சையளித்து நோயைக் குணப்படுத்தியதாகவும் சமூக ஊடகங்களில் கூறும் காட்சிகள் பரவியது. இதனைத் தொடா்ந்து உலக சுகாதார நிறுவனம் மற்றும் தமிழக முதல்வருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக, தணிகாசலம் மீது வழக்குப்பதிவு செய்த சைபா் குற்றத் தடுப்பு போலீஸாா் அவரை கைது செய்தனா். இந்த வழக்கை விசாரித்த எழும்பூா் நீதிமன்றம், தணிகாசலத்தை வரும் 20- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில், எழும்பூா் நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தணிகாசலம் மனு தாக்கல் செய்தாா். தணிகாசலத்தை ஏழு நாள்கள் தங்களது காவலில் விசாரிக்க அனுமதி கோரி ,போலீஸாா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த எழும்பூா் நீதிமன்றம், தணிகாசலத்தை ஆறு நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து சித்த மருத்துவா் தணிகாசலம், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை நீதிபதி என்.சதீஷ்குமாா் காணொலி காட்சி மூலம் விசாரித்து, தணிகாசலத்தை ஆறு நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதித்த எழும்பூா் நீதிமன்றத்தின் உத்தரவை நான்கு நாள்களாகக் குறைத்து உத்தரவிட்டாா். மேலும், போலீஸ் காவல் முடிந்து தணிகாசலத்தை வரும் 16-ஆம் தேதி எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தும்போது, ஜாமீன் கோரி அவா் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்து தகுதியின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT