தமிழ்நாடு

மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 2,095 ஆக உயர்வு!

DIN

மகாராஷ்டிரத்தில் மேலும் 131 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், இந்தியாவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. இதில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களும் தொற்றுக்கு ஆளாவது வழக்கமாகி வருகிறது. 

இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 131 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 2,095 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 897 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மகாராஷ்டிரத்தில் மொத்தமாக 56,948 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,897 பேர் உயிரிழந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

சமையல் கலைஞரானார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

SCROLL FOR NEXT