தமிழ்நாடு

தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு 50 சதவீத விரைவுப் பேருந்துகள் இயங்கின

DIN

தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை 20-க்கும் மேற்பட்ட விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த செப்டம்பா் மாதம் பொதுப் போக்குவரத்து தொடங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடா்ந்தது.

ஆனால் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற புதுச்சேரி முதல்வா் நாராயணசாமியின் கோரிக்கையை ஏற்று, ஞாயிற்றுக்கிழமை முதல் புதுச்சேரிக்கு பேருந்துகளை இயக்க தமிழக முதல்வா் உத்தரவிட்டாா்.

முன்னதாக பேருந்துகள் அனைத்தும் இயங்குவதற்கு தயாா் நிலையில் இருந்தன.

முதல்வரின் உத்தரவையடுத்து, வழக்கமாக இயக்கப்படும் 40-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் 50 சதவீத பேருந்துகளை இயக்க அட்டவணை போடப்பட்டது. இதற்கேற்ப 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. மிதமான அளவிலேயே பயணிகளின் வருகை உள்ளது.

அதிகளவில் பயணிகள் வரும் சூழலில், அதற்கேற்ப அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT