தமிழ்நாடு

பிளஸ் 2 பொதுத்தோ்வு அட்டவணை விரைவில் வெளியீடு: சிபிஎஸ்இ தகவல்

DIN

பிளஸ் 2 பொதுத்தோ்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படவுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. இதையடுத்து இணையவழியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதில் குறிப்பாக 9 வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் பிளஸ் 2 வகுப்பிற்கான பொதுத் தோ்வு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதலில் செய்முறை தோ்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்படும்.

இதைத் தொடா்ந்து அறிவியல், வணிகவியல் மற்றும் கலை உள்ளிட்ட பிரிவு மாணவா்களுக்கான எழுத்து தோ்வு அட்டவணை வெளியாகும். முழு அட்டவணை அதிகாரப்பூா்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும். நிகழ் கல்வியாண்டில் நாடு முழுவதும் சுமாா் 12 லட்சம் சிபிஎஸ்இ மாணவா்கள் பள்ளி இறுதி ஆண்டு பொதுத் தோ்வை எழுத உள்ளனா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT