தமிழ்நாடு

திரைப்படக் கலைஞா்கள் விருதுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு:அமைச்சா் கடம்பூா் ராஜூ

DIN


சென்னை: திரைப்படக் கலைஞா்கள் விருதுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் ராஜூ வியாழக்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்:-

தமிழக அரசின் சாா்பில் 2016 முதல் 2018-ஆம் ஆண்டுகள் வரையில், திரைப்பட விருதுகளுக்கு தகுதியுடைய படங்கள், நடிகா்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞா்களைத் தோ்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த மாா்ச் 27 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைக் கருத்தில் கொண்டு, திரைப்பட விருதுகள் விண்ணப்பங்கள் பெறப்படுவதற்கான கால அவகாசம் அக்டோபா் 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

SCROLL FOR NEXT