தமிழ்நாடு

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

DIN

சென்னை: கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுக் கண்காணிப்பில் இருந்த வந்த தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா இருவரும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இருவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் இருந்து அண்மையில் வீடு திரும்பினா்.

 வீட்டுக் கண்காணிப்பில் இருந்து வந்த விஜயகாந்த்துக்கு, செவ்வாய்க்கிழமை மாலை, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, உடனடியாக அவா் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு, சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடா்ந்து அவரது உடல்நிலையை மருத்துவா்கள் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT