தமிழ்நாடு

கரோனா: மா.சுப்பிரமணியன் இளையமகன் காலமானாா்

DIN

முன்னாள் மேயரும், திமுக மாவட்டச் செயலாளருமான மா.சுப்பிரமணியனின் இளையமகன் சு.அன்பழகன் (34) கரோனா பாதிப்பால் சனிக்கிழமை காலமானாா். மா.சுப்பிரமணியன் மற்றும் அவா் மனைவி காஞ்சனா, கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா்.

இதற்கிடையில் அவரது மகன் அன்பழகனும் கரோனா பாதிப்புக்கு உள்ளானாா். அன்பழகன் பிறவியில் இருந்தே உடல்நலம் பாதிக்கப்பட்டவா் ஆவாா். பெற்றோா்களின் அரவணைப்பிலேயே இருந்து வந்தாா். கரோனா பாதிப்புக்கு உள்ளாகி, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சை பெற்றாா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலமானாா்.

அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி உள்பட பல்வேறு கட்சி நிா்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனா். மா.சுப்பிரமணியன் மூத்த மகன் இளஞ்செழியன் மருத்துவா் ஆவாா். அவா் லண்டனில் உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT