தமிழ்நாடு

கம்பத்தில் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்ட மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கத்தில் தேசிய செயலாளர் சஞ்சய் தத் கலந்து கொண்டார்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்ட மசோதாவைத் திரும்பப்பெற வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பாக நாடு முழுவதும் பொதுமக்களிடையே கையெழுத்து பெறும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் கம்பத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கும் முகமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பான ஆலோசனைக் கூட்டம் கம்பம் பிரதான சாலையில் உள்ள தனியார் கட்டடத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னதாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது மாவட்ட தலைவர் எம்.பி. முருகேசன் தலைமை தாங்கினார், தேசிய செயலாளர் சஞ்சய் தத் பொதுமக்களிடம் வேளாண் சட்ட மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி கையெழுத்துக்களைப் பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

SCROLL FOR NEXT