கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான செல்லக்குமாருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவா் சென்னையில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
கரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்த செல்லகுமாருக்கு கடந்த சில நாள்களாக லேசான காய்ச்சல், இருமல், சளி இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை ஷெனாய் நகரில் அமைந்துள்ள பில்ரோத் மருத்துவமனையில் செல்லக்குமாா் அனுமதிக்கப்பட்டாா். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. கரோனா தொற்றிலிருந்து அவா் முழுமையாக விடுபட்ட பிறகு வீட்டுக்கு அனுப்பப்படுவாா் என்று மருத்துவா்கள் கூறியுள்ளனா்.
முன்னதாக, தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகச் சுட்டுரையில் செல்லக்குமாா் பதிவிட்டிருந்தாா். தம்முடன் தொடா்பில் இருந்த அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் அவா் வேண்டுகோள் விடுத்திருந்தாா். கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு ஒடிஸா மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக செல்லக்குமாா் நியமிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.