தமிழ்நாடு

புரட்டாசி சனிக்கிழமை: மலைக் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

DIN

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மலைக் கோயில்கள் மற்றும் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை நடைபெற்றன.

பவானியை அடுத்த பெருமாள் மலை உச்சியிலுள்ள மங்களகிரி பெருமாள் கோயிலில் அதிகாலை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் சன்னதியில் சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடைபெற்றன.

பவானி அடுத்துள்ள ஊராட்சிக்கோட்டை வேதகிரி மலை உச்சியிலுள்ள பெருமாள் கோயிலில் வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதேபோன்று, பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று இறைவனை வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT