தமிழ்நாடு

கம்பத்தில் சீர்மரபினர் ஆர்ப்பாட்டம்

DIN

தேனி மாவட்டம் கம்பம் உத்தமபுரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அருகில் சீர்மரபினர் நலச் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன் கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர்  ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி செயலாளர் செங்குட்வன், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கவுதம், கம்பம் நகரச் செயலாளர் காளீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் சமூக பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரையும் (ஓ.பி.சி.) சேர்க்க வேண்டும், 2011 - ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட வேண்டும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முறையை அமல் படுத்த வேண்டும், ஓ.பி.சி கிரிமிலேயரை ரத்து செய்யவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் சீர்மரபினர் நலச் சங்கத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT