வேளாண் மசோதாக்களை கண்டித்து கடலூரில் திமுக கூட்டணி சார்பில் கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது அவ்வழியே சென்ற மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதை பார்த்தார்.
அங்கே சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருந்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை கண்காணிப்பாளர் சாந்தியை அழைத்து சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கு உத்தரவிட்டார்.