தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் ரூ. 159 கோடிக்கு மது விற்பனை
புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று(வியாழக்கிழமை) ஒரே நாளில் ரூ. 159 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ. 159 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ. 48.75 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன. கோவை மண்டலத்தில் ரூ. 28.40 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ. 28.10 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ. 27.30 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ. 26.49 கோடி என்ற அளவில் மது விற்பனை நடந்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது .
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.