முகப்பு
தமிழ்நாடு

தம்மம்பட்டியில் வெறிநாய் கடித்து 7 ஆடுகள் பலி

தம்மம்பட்டியில் வெறிநாய் கடித்து குதறியதில் 7 ஆடுகள் பலியாகியுள்ளது.

Updated On : 2 ஜனவரி 2021, 12:02 pm IST
பகிர்:

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் வெறிநாய் கடித்து குதறியதில் 7 ஆடுகள் பலியாகியுள்ளது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பனந்தோப்பை சேர்ந்தவர் ராமசாமி மகன் முத்துசாமி( 55). இவர், தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக, வயலில் கட்டி வைத்துள்ளார். அவற்றை, வெள்ளிக்கிழமை இரவு, வெறிநாய் கடித்து குதறியதில் 7 ஆடுகள் பரிதாபமாக பலியானது. கடந்த மாதம், தம்மம்பட்டி கருமாயி வட்டத்தில் துரை, அறிவு, செல்வம், செல்லம்மாள் மற்றும் நேரு நகரைச் சேர்ந்த மணி ஆகியோரின் ஆடுகளை வெறிநாய் கடித்ததில் 20 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளது. 

இப்பகுதியில் ஆடு, கோழிகளை கடித்து சாகடிக்கும் வெறிநாயை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பேரூராட்சி நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தும்,எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், வெறிநாய்களுக்கு பலியாகும் ஆடுகளின் எண்ணிக்கை தொடர்வதாக, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments