தீர்த்தவாரி கண்டருளிய ஸ்ரீரங்கம் நம்பெருமாள்!
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோவிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவின் இராப்பத்து 10 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை காலை நம்பெருமாள் தீா்த்தவாரி கண்டருளினார்.
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோவிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவின் இராப்பத்து 10 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை காலை நம்பெருமாள் தீா்த்தவாரி கண்டருளினார்.
விழாவையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.30-க்கு புறப்பட்டு பரமபதவாசலை 10.30- க்கு கடந்தார். பின்னா் 11 மணிக்கு சந்திரபுஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளி, 12 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளினார்.
8 மணி முதல் 10 மணி வரை அரையா் சேவையும் திருப்பாவாடை கோஷ்டியும் நடைபெற்றது.
Advertisement
Advertisement
பொதுஜனச் சேவை காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இரவு 8 மணிக்குமேல் மூலஸ்தான சேவை கிடையாது.
திங்கள்கிழமை நம்மாழ்வாா் மோட்சமும், இயற்பா சாற்று முறையும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையா் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.