முகப்பு
தமிழ்நாடு

மிட்டப்பள்ளி ஊராட்சியில் இலவச வேட்டி சேலை விநியோகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச வேட்டி ,சேலை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி 2021, 11:21 am IST
மிட்டப்பள்ளி ஊராட்சியில் இலவச வேட்டி சேலை விநியோகம்
பகிர்:


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மிட்டப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஏசி. தேவேந்திரன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்க இயக்குனர்கள் பழனி, கிருஷ்ணன், கிராம நிர்வாக உதவியாளர் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வேட்டி, சேலைகளை வாங்கிச் சென்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments