முகப்பு
தமிழ்நாடு

திரையரங்கில் 100% ரசிகர்களை அனுமதிப்பது நல்லதல்ல: நீதிமன்றம்

பள்ளிகள் மூடியிருக்கும்போது திரையரங்குகளில் 100 சதவிகிதம் அனுமதிப்பது நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 2:18 pm IST
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

பள்ளிகள் மூடியிருக்கும்போது திரையரங்குகளில் 100 சதவிகிதம் அனுமதிப்பது நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று சூழலில் திரையரங்கில் 100 சதவிகிதம் முழுமையாக ரசிகர்களை அனுமதிப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் வரை தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

திரையரங்கு விவகாரத்தில் குழந்தைகள் போன்று அரசு மெதுவாக அடியெடுத்து வைக்க வேண்டும் என்றும்,

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப்படி ஜனவரி 11-ஆம் தேதி வரை திரையரங்கில் 50 சதவிகித ரசிகர்கள் அனுமதியுடன் திரையரங்குகள் இயங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையே சேர்த்து விசாரிக்கும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments