ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து முதல்வர் தலைமையில் போராட்டம் தொடக்கம்
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை புதுச்சேரியில் இருந்து வெளியேறத் கோரி முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை போராட்டம் தொடங்கப்பட்டது.
புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை புதுச்சேரியில் இருந்து வெளியேறத் கோரி முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை போராட்டம் தொடங்கப்பட்டது.
புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்களை தடுத்து நிறுத்தும் கிரண்பேடி வெளியேறக் கோரி ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்த காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்தன.
இந்நிலையில், புதுச்சேரியில் பல்வேறு முக்கிய அலுவலகங்கள் முன்பு 144 தடை உத்தரவு புதன்கிழமை முதல் போடப்பட்டது.
Advertisement
Advertisement
ஆளுநர் மாளிகை பாதுகாப்புக்காக 3 கம்பெனிகள் கொண்ட துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே புதுச்சேரி அண்ணா சிலை முதல் வெங்கட்ட சுப்பா ரெட்டியார் சிலை வரை போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கியது.
இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை முதல் ஜன.11 ஆம் தேதி வரை தொடர்ந்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை முதல்வர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆனால் பிரதான கூட்டணி கட்சியான திமுக பங்கேற்கவில்லை. கடந்த ஒரு மாதமாகவே காங்கிரஸ் தலைமையில் நடக்கும் போராட்டத்தை திமுக புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.