நாமக்கல்லில் ஓவியக் கண்காட்சி தொடக்கம்
மத்திய அரசின் தென்னக பண்பாட்டு மையம், தமிழக அரசின் சேலம் மண்டல கலை பண்பாட்டு துறை ஆகியவை சார்பில் நாமக்கல் சுப்புலட்சுமி மஹாலில் சனிக்கிழமை ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி தொடங்கியது.
நாமக்கல்: மத்திய அரசின் தென்னக பண்பாட்டு மையம், தமிழக அரசின் சேலம் மண்டல கலை பண்பாட்டு துறை ஆகியவை சார்பில் நாமக்கல் சுப்புலட்சுமி மஹாலில் சனிக்கிழமை ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தொடங்கி வைத்தார்.
நாமக்கல் கண்காட்சியில் இடம்பெற்ற ஓவியங்கள்
சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கலை பண்பாட்டு துறையின் சார்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் காலை 9.30 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
நாமக்கல் மாவட்டத்தின் சிறந்த ஓவியச் சிற்பக்கலைஞர்களின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
இக்கண்காட்சியினை கலை பண்பாட்டுத் துறையின் ஆணையர் வ.கலையரசி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
சென்னை, தஞ்சை கவின் கலைக் கல்லூரிகளின் ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை சேலம் மண்டல கலை பண்பாட்டு துறை இயக்குநர் ஹேமநாதன் செய்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.