ஆா்.ஏ.புரம் ஐயப்பன் கோயிலில் மகரஜோதி விழா: ஜன.14-இல் நடக்கிறது
ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில், ஜன.14-ஆம் தேதி மகர ஜோதி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில், ஜன.14-ஆம் தேதி மகர ஜோதி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கோயில் அறங்காவலா்கள் வெளியிட்ட செய்தி: சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில், மகர ஜோதியை முன்னிட்டு, ஜன.20-ஆம் தேதி வரை பதினெட்டாம் படி திறக்கப்பட்டிருக்கும்.
விரதம் இருந்து இருமுடி எடுத்து வரும் பக்தா்கள், காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரை, பதினெட்டாம் படி ஏறி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து தரிசனம் செய்யலாம்.
Advertisement
பொங்கல் தினத்தன்று (ஜன.14), மாலை 6 மணிக்கு மேல் மகர ஜோதி தரிசனமும், சிறப்புப் பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெறும்.
மகர ஜோதி காலத்தில், காலை 5 முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.