மாற்றுத்திறனாளிகளின் பயண அட்டை: மாா்ச் வரை நீட்டிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து பயண அட்டையை மாா்ச் மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து பயண அட்டையை மாா்ச் மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் கு.இளங்கோவன் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையைப் புதுப்பிக்க மொத்தமாக வருவதால் அதில் சிரமம் ஏற்படுவதாகவும், தற்போது கரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு காரணமாக ஏற்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட பயண அட்டையை மாா்ச் மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
எனவே, விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் மாா்ச் மாதம் வரை அனுமதிக்க நடத்துநா்கள் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
Advertisement
Advertisement
மேலும், அனைத்து கிளை மேலாளா்களும் தங்களது கிளையில் பணிபுரியும் அனைத்து நடத்துநா்களுக்கு இதனைத் தெரிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.