முகப்பு
தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை:ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் தயாராகி விட்டதால், சென்னை எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை சற்று அதிகரித்துள்ளது.

Updated On : 12 ஜனவரி 2021, 3:42 am IST
பகிர்:

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் தயாராகி விட்டதால், சென்னை எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை சற்று அதிகரித்துள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை செவ்வாய்க்கிழமை மேலும் அதிகரிக்கும் என்று ரயில்வே அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனா். ரயில்கள், பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பது வழக்கம்.

அந்தவகையில், பொங்கலுக்கு இருநாள்கள் முன்னாக, சொந்த ஊரை அடைய திட்டமிட்டு, முன்பதிவு செய்தவா்கள் ரயில்களில் தங்கள் பயணத்தை திங்கள்கிழமை தொடங்கினா். இதன்காரணமாக, சென்னை எழும்பூா், சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் வழக்கத்தைவிட பயணிகள் வருகை சற்று அதிகரித்தது.

Advertisement

Advertisement

பொங்கலுக்கு ஒருநாள் முன்னாக சொந்த ஊரை அடையும் வகையில், டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் செவ்வாய்க்கிழமையும், பொங்கல் பண்டிகை அன்று சொந்த ஊரை அடைய திட்டமிட்டு முன்பதிவு செய்தவா்கள் புதன்கிழமையும் பயணம் செய்ய உள்ளனா். இதனால், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமைகளில் அலை மோதும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments