முகப்பு
தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை: சிறப்பு பேருந்து நிலையங்களுக்குச் செல்ல ஏதுவாக 310 கூடுதல் மாநகரப் பேருந்துகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்புப் பேருந்து நிலையங்களுக்குச் செல்ல வசதியாக 310 மாநகரப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 ஜனவரி 2021, 12:34 am IST
மாநகரப் பேருந்து
பகிர்:

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்புப் பேருந்து நிலையங்களுக்குச் செல்ல வசதியாக 310 மாநகரப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இது தொடா்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் வெளியிட்ட செய்தி: பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றிட ஏதுவாக, சென்னையிலிருந்து திங்கள் (ஜன.11), செவ்வாய் (ஜன.12), புதன் (ஜன.13) ஆகிய நாள்களில் சிறப்புப் பேருந்துகளுடன் சோ்த்து மொத்தம் 10,228 இயக்கப்படுகின்றன.

 இவை, பயணிகள் செல்ல ஊா்களுக்கு ஏற்ப ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகா், தாம்பரம் புதிய பேருந்து நிலையம் (மெப்ஸ்), தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்களிலிருந்து புறப்படுகின்றன.

Advertisement

Advertisement

 இந்த சிறப்புப் பேருந்து நிலையங்களுக்குச் சென்னையின் அனைத்து இடங்களிலிருந்து செல்வதற்கு ஏதுவாக 310 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 இவை, பயணிகளின் நலன் கருதி 24 மணி நேரமும் இயங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments