முகப்பு
தமிழ்நாடு

சின்னமனூர் அருகே சமத்துவ பொங்கல் விழா

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அப்பிபட்டி விஸ்வநாதபுரம் அங்கன்வாடி மையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

Updated On : 13 ஜனவரி, 2021 at 3:14 PM
விஸ்வநாதபுரம் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா.
பகிர்:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அப்பிபட்டி விஸ்வநாதபுரம் அங்கன்வாடி மையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

அப்பிபட்டி ஊராட்சியில் உள்ள விஸ்வநாதபுரம் அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் அமையத்தின் பொறுப்பாளர் அனீஸ் பாத்திமா அவர்கள் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை அழைத்து சமத்துவ பொங்கல்  விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தார்.

அதன்படியே சமத்துவ பொங்கல் விழா அங்கன்வாடி மைய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றப்பட்டது. அனைவருக்கும்  பொங்கல் சாப்பிட்டு தமிழர் திருநாளாம் தைத்திருநாள் போற்றினர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.