தைத் திருநாள்: சாத்தான்குளத்தில் திமுக கொடியேற்று விழா
பொங்கல் திருநாளை முன்னிட்டு சாத்தான்குளம் ஒன்றிய, நகர திமுக சார்பில் திமுக கொடியேற்று விழா வியாழக்கிழமை நடந்தது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு சாத்தான்குளம் ஒன்றிய, நகர திமுக சார்பில் திமுக கொடியேற்று விழா வியாழக்கிழமை நடந்தது.
புதிய பேருந்து நிறுத்தத்தில் ஒன்றிய செயலாளர் ஜோசப் கொடியேற்றினார். சிஎஸ்ஐ வேதக் கோவில் முன்பு நகர திமுக செயலாளர் மகா.இளங்கோ , கொடியேற்றினார்.
மாவட்ட பிரதிநிதி சரவணன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் மாரியப்பன், நகர துணை செயலாளர் வெள்ள பாண்டியன், நகர இளைஞரணி அமைப்பாளர் முருகன், வார்டு செயலாளர்கள், மணிகண்டன், அம்புரோஸ் டேனியல், நகர விவசாய அணி அமைப்பாளர் வியாகப்பன், இஸ்மாயில், முன்னாள் மாவட்ட பிரதிநிதி கெங்கை ஆதித்தன், இளைஞரணி முன்னாள் ஒன்றிய துணை அமைப்பாளர் செல்வன், ஊராட்சி செயலாளர் கோவிந்தன், முன்னாள் நகர துணைச் செயலாளர் கார்த்திகேயன், வில்லியம், ஹிதயத்துல்லா, சொர்ணம், ஒன்றிய பிரதிநிதி குருசாமி, நடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் ஜோசப் செய்திருந்தார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.