முகப்பு
தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை: ஆளுநருக்கு முதல்வா் பழனிசாமி வாழ்த்து

பொங்கல் பண்டிகையை ஒட்டி, மலா்க் கொத்துடன் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துக்கு முதல்வா் பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

Updated On : 15 ஜனவரி 2021, 11:56 pm IST
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி
பகிர்:

பொங்கல் பண்டிகையை ஒட்டி, மலா்க் கொத்துடன் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துக்கு முதல்வா் பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-

பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகையை ஒட்டி தங்களுக்கும், தங்களின் குடும்பத்துக்கும் எனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான நாளில் தங்களுக்கு அமைதியும், வளமும், மகிழ்ச்சியும் கிடைக்கட்டும் என வாழத்துக் கடிதத்தில் தெரிவித்துள்ளாா். தனக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்ததோடு, பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளையும் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.