ஞானதேசிகன் மறைவு த.மா.கா.வினருக்கு பேரிழப்பு: முதல்வர்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஞானதேசிகனின் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஞானதேசிகனின் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை ஆழமாகவும் அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர். கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடன் அன்பாக பழகக் கூடியவர்.
Advertisement
ஞானதேசிகனின் மறைவு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்லாமல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினருக்கும் தொண்டர்களுக்கும் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது இறைவன் நிழலில் இளைப்பார இறைவனை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.