முகப்பு
செய்திகள்

15 கோல்களைத் தடுத்து, உலகச் சாதனையில் இடம்பிடித்த கோல்கீப்பர்!

மிகச் சிறிய தீவு நாடான குராசோ உலகக் கோப்பையில் நிகழ்த்திய சாதனை குறித்து...

Updated On : 21 ஜூன் 2026, 2:45 pm IST
போட்டிக்குப் பிறகு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த எலாய் ரூம். - படம்: ஏபி
பகிர்:

கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் மிகச்சிறிய நாடாக குராசோ தீவு தேர்வாகி சாதனை படைத்திருந்தது. தற்போது, இந்த அணி ஈக்குவாடர் உடனான போட்டியில் சமனில் முடித்து தனது முதல் உலகக் கோப்பையில் 1 புள்ளியைப் பெற்று அசத்தியிள்ளது.

அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி திடலில் குரூப் இ பிரிவில் இடம்பெற்றுள்ள குராசோ அணியும் ஈக்குவாடர் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் இரு அணிகளும் 90 நிமிஷங்கள் வரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் குராசோ தீவின் கோல் கீப்பர் எலாய் ரூம் (37 வயது) 15 கோல்களைத் தடுத்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பந்தைத் தடுக்கும் எலாய் ரூம். - ஏபி

ஈக்குவாடர் அணி இந்தப் போட்டியில் 65 சதவிகிதம், 27 ஷாட்டுகளை அடித்தது. அதில் 15 முறை இலக்கை நோக்கி அடித்தது. அத்தனையும் எதிரணியின் கோல் கீப்பர் தடுத்து அசத்தினார்.

உலகக் கோப்பை வரலாற்றிலேயே இது இரண்டாவது அதிகபட்சமாக தடுத்த கோல்கள் ஆகும். முதலிடத்தில், அமெரிக்காவின் டிம் ஹோவர்ட் 2014 உலகக் கோப்பையில் 16 கோல்களை தடுத்திருந்தார்.

இந்த உலகக் கோப்பையில் ஏற்கெனவே 7 கோல்களை தடுத்த கேப் வெர்டே கோல்கீப்பர் கவனம் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

summary

Eloy Room makes history with 15 saves against Ecuador and curacao gets first point in World Cup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.