முகப்பு
தமிழ்நாடு

ராஜபாளையம்: விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை 

இராஜபாளையம் தனியார் தங்கும் விடுதியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த தம்பதியினர் உள்பட 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து வடக்கு காவல் நிலைய காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On : 15 ஜனவரி, 2021 at 4:10 PM
ராஜபாளையம்: விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை
பகிர்:

இராஜபாளையம் தனியார் தங்கும் விடுதியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த தம்பதியினர் உள்பட 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து வடக்கு காவல் நிலைய காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் குருவையாராஜா தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தன ராஜா  (வயது 65 ). பல ஆண்டுகளுக்கு முன்பே கோயம்புத்தூர் பகுதியில் நிரந்தரமாக குடியேறியுள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கரோனா காலத்தில் கோயம்புத்தூரில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இராஜபாளையத்தில் குருவுராஜா தெருவில் உள்ள  உறவினர்கள் வீட்டுக்கு ஜனார்ந்தன ராஜா,  இவரது மனைவி கலாவதி (வயது 45 ) மகன் சித்தார்த்  (17வயது  ) மூவரும் உறவினர் வீட்டுக்கு வந்த நிலையில் இராஜபாளையம் மருத்துவமனை ரோட்டில் உள்ள  தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கி உள்ளனர்.

Advertisement

இதில் 3 பேரும் விஷம் அருந்தியது  விடுதி ஊழியர்களுக்கு தெரிய வந்ததை அடுத்து மூன்று பேரையும் காப்பாற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர். அதற்குள் சிறுவன் சித்தார்த் விடுதியிலே உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஜனார்த்தனா ராஜா மற்றும் இவரது மனைவி கலாவதி இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கலாவதி உயிரிழந்தார். ஜனார்த்தன ராஜா இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ராஜபாளையம் பகுதியில் உறவினர்கள் இருக்கும் நிலையில் இவர்கள் ஏன் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்? தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.