முகப்பு
தமிழ்நாடு

காணும் பெங்கலை முன்னிட்டு வைப்பூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

வைப்பூர் ஊராட்சியில் காணும் பொங்கலை முன்னிட்டு அப்பகுதி பொதுமக்கள் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வசந்திசந்தானம்

Updated On : 16 ஜனவரி 2021, 4:33 pm IST
காணும் பெங்கலை முன்னிட்டு வைப்பூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
பகிர்:

ஸ்ரீபெரும்புதூர்: வைப்பூர் ஊராட்சியில் காணும் பொங்கலை முன்னிட்டு அப்பகுதி பொதுமக்கள் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வசந்திசந்தானம் பரிசு பொருள்கள் வழங்கினார். 

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குள்பட்ட வைப்பூர் பகுதியில் காணும் பொங்கலை முன்னிட்டு அப்பகுதி பொதுமக்கள் சார்பாக சமத்துவ பொங்கல் விழா அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். 

இதையடுத்து பெண்களுக்கான  உரியடி, கோலப்போட்டி, கயிறு இழுத்தல், மியூசிக் சேர்  உள்ளிட்ட பல்வேறு  போட்டிகளும், ஆண்களுக்கு கிரிக்கெட், ஓட்டப்பந்தயம், உறியடித்தல், கயிறு இழுத்தல்,  வாலிபால் போட்டிகள்  ஆகிய  நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன. 

Advertisement

Advertisement

இதில் வைப்பூர்  ஊராட்சிமன்ற  முன்னாள் தலைவர் வசந்திசந்தானம் கலந்துக்கொண்டு விளையாட்டு  போட்டிகளில் வெற்றி  பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.